சென்னை நகரின் போக்குவரத்து சவால்களை   குறைக்கவும், சமச்சீர் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு சென்னையைச் சுற்றியுள்ள ஒன்பது வளர்ச்சி மையங்களுக்கான புதிய நகர மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

ஒன்பது வளர்ச்சி மையங்கள்:

  1. மீஞ்சூர்
  2. திருவள்ளூர்
  3. திருமழிசை
  4. மாமல்லபுரம்
  5. செங்கல்பட்டு
  6. காஞ்சிபுரம்
  7. மறைமலை நகர்
  8. திருநின்றவூர்
  9. பரந்தூர்

முக்கிய நோக்கங்கள்:

  • சென்னை நகரில் போக்குவரத்து  நெரிசல் குறைப்பு: மாநகரத்தின் வளர்ச்சி, பொருளாதார நடவடிக்கைகளை  மேம்படுத்துவதற்காக  புறநகர்ப் பகுதிக்கு   குடிப்பெயர்வதின்  மூலம் நகரத்தின் அதிகப்படியான மக்கள் நெரிசலைக் குறைப்பது.
  • பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்: நகர மையத்திற்கு வெளியே தொழில்துறை, வணிக மற்றும் குடியிருப்பு துறைகளின் வளர்ச்சியை ஊக்குவித்தல்.
  • மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பு: நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு இடையே சாலைகள், ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துதல், பயண நேரத்தைக் குறைத்தல்.
  • நிலையான வளர்ச்சி: இந்த பகுதிகளில் நகர்ப்புற விரிவாக்கம் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையானதாகவும், நன்கு திட்டமிடப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்தல்.