1. சென்னை மற்றும் கோவையில் செல்லப்பிராணி பூங்காக்கள் அமைய உள்ளன.  செல்லப்பிராணி வளர்ப்பை ஊக்குவிக்கவும், விலங்குகளின் நலனை மேம்படுத்தவும் இரு நகரங்களிலும் பிரத்யேக செல்லப்பிராணி பூங்காக்களை அரசு அமைக்க உள்ளது .
  1. நிதி மற்றும் மேம்பாடு: மொத்தம் ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் இந்த திட்டம் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளது .
  1. வசதிகள் மற்றும் அம்சங்கள்: பூங்காக்களில் செல்லப்பிராணிகளுக்கான விளையாட்டு பகுதிகள், நடைபாதை இடங்கள், மறுவாழ்வு மற்றும் மருத்துவ வசதிகள் இருக்கும். சென்னையில் முதல் பூங்கா தேனாம்பேட்டை டிமானடி காலனியில் திட்டமிடப்பட்டுள்ளது.
  1. தெருநாய்கள் கட்டுப்பாடு: தெருநாய்களின் எண்ணிக்கையை நிர்வகிக்க மாநிலம் முழுவதும் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு திட்டங்களை வலுப்படுத்த தனியாக ₹20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.