குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், அது ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

  • அரசியலமைப்பின் 200-வது பிரிவின் கீழ், ஆளுநருக்கென எந்தவொரு விருப்ப அதிகாரமும் இல்லை என்றும், அமைச்சரவை ஆலோசனையின் பேரில் அவர் செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது .

மாநில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநரின் பங்கு  200-வது பிரிவு கோடிட்டுக் காட்டுகிறது. 200-வது பிரிவின் கீழ் ஆளுநர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்:

  • ஒப்புதலை நிறுத்தி வைத்தல்: 1 மாதத்திற்குள்
  • அமைச்சரவையின் ஆலோசனைக்கு மாறாக நிறுத்தி வைத்தல்: 3 மாதங்களுக்குள்
  • மசோதாக்களை மறுபரிசீலனை செய்தல்: 1 மாதத்திற்குள்
  • நீதிமன்றத்தின் கருத்துகள்: ஆளுநர் முழுமையான அல்லது பாக்கெட் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது.
  • சட்டமன்றத்தால் ஒரு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டவுடன், மசோதாவில் கணிசமான மாற்றங்கள் இல்லாவிட்டால், ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  • அனைத்து 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும் என்று நீதிமன்றம் 142-வது பிரிவை மேற்கோள் காட்டி அறிவித்தது.
  • முந்தைய தீர்ப்புகளான  பஞ்சாப் மாநில வழக்கு ,ஆளுநர் புறக்கணித்தது குறித்து நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டினர் .

முக்கியமான மேற்கோள்:

நீதிபதி பார்திவாலா டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் கூற்றை மேற்கோள் காட்டினார்:

ஒரு அரசியலமைப்பு எவ்வளவு நன்றாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், அது மோசமாகவே இருக்கும்…”