(DRIP Dam Rehabilitation and Improvement Project ) கட்டம் II

அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் (DRIP) கட்டம் II என்பது தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் முன் முயற்சியாகும். தற்போதுள்ள அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திட்டத்தின் சுருக்கம் பின்வருமாறு:
திட்ட கண்ணோட்டம்:
- நோக்கம்: தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல், அவற்றின் நீண்டகால நிலைப்புத்தன்மை மற்றும் நீர் வள மேலாண்மையில் பங்களிப்பை உறுதி செய்தல்.
- வரம்பு: இத்திட்டத்தில் கட்டமைப்பு மேம்பாடுகள், செயல்பாட்டு நடைமுறைகளின் நவீனமயமாக்கல் மற்றும் அணை பாதுகாப்பிற்கான திறனை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
- நிதி: DRIP II ஆனது மாநில நிதி , உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank AIIB) ஆகிய நிதி பயன்படுகிறது .
முக்கிய செயல்பாடுகள்:
- அணைகளின் புனரமைப்பு: நீர் கசிவுப்பாதை, மதகுகள் மற்றும் கரைகள் உட்பட அணைக் கட்டமைப்புகளுக்கான பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல்கள் ஆகும் .
- செயல்பாடுகளை நவீனமயமாக்கல்: நீர்த்தேக்க செயல்பாடு, நீர் மேலாண்மை மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான மேம்பட்ட நுட்பங்களைச் செயல்படுத்துதல்.
- நிறுவன வலுவூட்டல்: அணைப் பரமாரிப்பு பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், அணை பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்குதல் ,கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்துதல்.
தற்போதைய நிலை:
- DRIP II தற்போது தமிழ்நாட்டில் பல அணைகள் புனரமைப்புக்கு உட்பட்டு வருகின்றன.
- இந்தத் திட்டம் டிசம்பர் 2027 வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழ்நாடு அரசு 2024-2025 நிதியாண்டில் DRIP II இன் கீழ் பல்வேறு நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளது, இதில் இயக்கச் செலவுகள், உபகரணங்கள் கொள்முதல் மற்றும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகைகள் அடங்கும்.
