• 1937-1940 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்பது பிரிட்டிஷ்  இந்தியாவின் சென்னை மாகாணத்தில் 1937-1940 காலகட்டத்தில்  நடைபெற்ற  போராட்டமாகும் .
  • ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு அரசாங்கம் மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள  பள்ளிகளில் இந்தியை  கட்டாயமாக கற்பிக்கப்படுவதை எதிர்த்து 1937 இல் போராட்டம்  தொடங்கப்பட்டது.
  • இந்த நடவடிக்கையை பெரியாரும் எதிர்க்கட்சியான நீதிக்கட்சியும் (பின்னர் திராவிடர் கழகம்)  எதிர்த்தன.
  • சுமார் 30 மாதங்கள் நீடித்த இந்தப் போராட்டம் உண்ணாவிரதம், மாநாடுகள், ஊர்வலங்கள், மறியல் மற்றும் போராட்டங்களை உள்ளடக்கியதாக  இருந்தது.
  • 1939 இல் காங்கிரஸ் அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து 1940 பிப்ரவரியில் மெட்ராஸ் பிரிட்டிஷ் கவர்னர் எர்ஸ்கின் பிரபுவால் கட்டாய இந்திக் கல்வி திரும்பப் பெறப்பட்டது.