- 2020 இல் தொடங்கப்பட்ட தேசிய தொழில்நுட்ப ஜவுளி திட்டம் 2025 இல் நிறைவடையும், இது இந்தியாவின் தொழில்நுட்ப ஜவுளித் தொழிலை மேம்படுத்துவதிலும் இறக்குமதியைக் குறைப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
- 2025 ஆம் ஆண்டிற்குள், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பில் தொழில்நுட்ப ஜவுளிகளில் தனது உலகளாவிய சந்தைப் பங்கை விரிவுபடுத்தவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் இந்தியா நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த திட்டம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு , தொடக்க நிறுவனங்களுக்கு ஆதரவு மற்றும் பணியாளர் பயிற்சி ஆகியவற்றை வலியுறுத்துகிறது, நுண்ணறிவு உடைகள் (Smart Fabrics), எளிதில் கரையும் துணிநூல்கள் (Biodegradable Textiles), மற்றும் உயர் செயல்திறனுடைய பொருட்கள் (High-Performance Materials) ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
