• தமிழகத்தில் தொல்குடி திட்டத்தின்  பல்வேறு முயற்சிகள் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கட்டமைப்பு மேம்பாடு:

  •  பழங்குடியினர் பகுதிகளில் உள்ள  சாலை வசதிகள், குடிநீர், தெரு விளக்குகள் மற்றும் நிரந்தர கான்கிரீட் வீடுகள் போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்குவதை  நோக்கமாக கொண்டுள்ளது .

வாழ்வாதார மேம்பாடு:

  • பழங்குடியின சமூக உறுப்பினர்களின் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது.
  • இதில் பல்வேறு விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாகும் .

திறன் மேம்பாடு:

  • குறிப்பாக பழங்குடியின இளைஞர்களுக்கான  வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர்களுக்கு தேவையான திறன்களை பயிற்சியின் மூலம்   கற்பிக்கப்படுகிறது.

கல்வி மேம்பாடுகள்:

  • பழங்குடியினர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுதல் போன்ற முயற்சிகள் இத்திட்டத்தில் அடங்கும்.

ஆராய்ச்சி ஊக்குவிப்பு:

  • பழங்குடியினர் மக்கள் தொகை பற்றிய ஆராய்ச்சியை இந்த திட்டம் ஊக்குவிக்கிறது. மாணவர்கள் பழங்குடியினரின் வாழ்க்கையின் பல்வேறு தரவுகளை ஆராய உதவித்தொகை திட்டங்கள் மூலம் இது செயல்படுகிறது.