பஞ்சாயத்து அதிகாரப் பகிர்வு குறியீடு 2024 என்பது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையாகும். இது இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் ( Panchayati Raj Institutions PRIs ) சுயாட்சி மற்றும் அதிகாரமளித்தலை மதிப்பிடுகிறது. சட்டம், செயல்பாடுகள், நிதி, அலுவலர்கள், திறன் மேம்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய ஆறு முக்கிய பரிமாணங்களில் அதிகாரங்கள் மற்றும் வளங்களின் பரவலை இது மதிப்பீடு செய்கிறது.
- தமிழ்நாடு, பஞ்சாயத்து அதிகாரப் பகிர்வு குறியீட்டின் ( Panchayat Devolution Index PDI )கீழ் அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
- கர்நாடகா (23) மற்றும் கேரளாவுக்கு (70.59) அடுத்ததாக தமிழ்நாடு 68.38 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
- ஒட்டுமொத்த அதிகாரப் பகிர்வு: கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒட்டுமொத்த அதிகாரப் பகிர்வு 2013-14 இல் 9% லிருந்து 2021-22 இல் 43.9% ஆக அதிகரித்துள்ளது.
- மாநில தரவரிசை: முதல் 5 மாநிலங்கள் கர்நாடகா (1வது), கேரளா (2வது), தமிழ்நாடு (3வது), மகாராஷ்டிரா (4வது) மற்றும் உத்தரபிரதேசம் (5வது). கீழ் நிலையில் தரவரிசைப்படுத்தப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, புதுச்சேரி மற்றும் லடாக்.
- உள்கட்டமைப்பு மேம்பாடுகள்: அரசாங்க முயற்சிகள் உள்கட்டமைப்பு, பணியமர்த்தல் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் மூலம் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை (PRIs) வலுப்படுத்தியுள்ளன, இதன் மூலம் அலுவலர்கள் குறியீடு 6% லிருந்து 50.9% ஆக உயர்ந்துள்ளது. ராஷ்டிரிய கிராம ஸ்வராஜ் அபியான் ( Rashtriya Gram Swaraj Abhiyan RGSA, 2018) குறியீட்டின் திறன் மேம்பாட்டு கூறுகளை 44% லிருந்து 54.6% ஆக உயர்த்தியுள்ளது.
- 6 பரிமாணங்களில் செயல்திறன்:
- சட்டம்: கேரளா பஞ்சாயத்துகளுக்கான வலுவான சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
- செயல்பாடுகள்: தமிழ்நாடு பஞ்சாயத்துகளுக்கான செயல்பாட்டுப் பொறுப்புகளைப் பகிர்ந்தளித்துள்ளது.
- நிதிகள்: கர்நாடகா சிறந்த நிதி மேலாண்மை நடைமுறைகளைக் கொண்டுள்ளது.
- அலுவலர்கள்: குஜராத் பணியாளர் மேலாண்மை மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளைக் கொண்டுள்ளது.
- பொறுப்புக்கூறல்: கர்நாடகா வெளிப்படைத்தன்மை மற்றும் நிதிப் பொறுப்புக்கூறலைக் காட்டுகிறது.
- பலவீனமான நிதி சுயாட்சி: மாநில நிதி ஆணையங்களின் ( State Finance Commissions (SFCs) பரிந்துரைகள்
- அமல்படுத்தப்படாதது, மத்தியமயமாக்கப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் நிதி சுயாட்சியின்மை ஆகியவை பஞ்சாயத்துகளின் நிதி கட்டுப்பாட்டை கட்டுப்படுத்துகின்றன.
- குறைந்த வளத் திறன்: தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பெரும்பாலும் நிர்வாகம், பட்ஜெட் மற்றும் திட்டமிடலில் முறையான பயிற்சி பெற்றிருப்பதில்லை.
- பரிந்துரைகள்: நிதிச் சுமை கடுமையான கண்காணிப்பு, பஞ்சாயத்தை வலுப்படுத்துதல், அதிகாரங்களின் முழுமையான பகிர்வின் மூலம் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் அளித்தல், SFC-களை வலுப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை அறிக்கை வலியுறுத்துகிறது.
