
குழுவின் நோக்கம்:
- இக்குழுவின் முதன்மை நோக்கம், தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதன் மூலம் , மாநிலத்தின் நிதி தாக்கங்களைக் கருத்தில் கொண்டு நன்மை தீமைகளை பகுப்பாய்வு செய்வதாகும்.
- அவர்கள் தற்போதைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் Contributory Pension Scheme (CPS) மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme UPS) ஆகியவற்றையும் ஆய்வு செய்வார்கள்.
குழு அமைப்பு:
இந்த குழுவில் முக்கிய அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் உள்ளனர், அவர்கள்:
- ககன்தீப் சிங் பேடி (IAS), கூடுதல் தலைமைச் செயலாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை)
- கே.ஆர். சண்முகம், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் முன்னாள் இயக்குனர்
- பிரதிக் தயால், நிதித் துறையின் துணைச் செயலாளர் (வரவு செலவுத் திட்டம்) (உறுப்பினர்-செயலாளர்)
அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு:
- குழு அதன் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து (பிப்ரவரி 2025) ஒன்பது மாதங்களுக்குள் தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை தமிழ்நாடு அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியத்துவம்:
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சியாகும்.
- தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டமாகும்.
