• ஹர் கர் கோ பானிஎன்ற முழக்கத்துடன் 2015 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட  பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயீ யோஜனா (PMKSY) உறுதியான நீர்ப்பாசனத்துடன் சாகுபடிப் பரப்பை விரிவுபடுத்தவும், நீர் விரயத்தைக் குறைக்கவும் மற்றும் நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் செயல்படுத்தப்படுகிறது.
  • PMKSY உறுதியான நீர்ப்பாசனத்திற்கான ஆதாரங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், ” ஜல் சஞ்சய்” மற்றும் ” ஜல் சிஞ்சன் ” மூலம் மழைநீரை நுண்ணிய அளவில் பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு நீர்ப்பாசனத்தையும் உருவாக்குகிறது.
  • ஒரு துளி-அதிக பயிர்” என்பதை உறுதி செய்வதற்காக மானியம் மூலம் நுண்ணீர் பாசனமும் ஊக்குவிக்கப்படுகிறது
  • விரிவாக்கம் :  பிரதான் மந்திரி கிரிஷி சின்சாயி யோஜனா (PMKSY) இன் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு கூறு 2.0 (WDC 2.0).
  • வெளியிடப்பட்ட ஆண்டு: 2021
  • செயல்படுத்தும் நிறுவனம்: நில வளத் துறை (DoLR), ஊரக மேம்பாட்டு அமைச்சகம் (MoRD), மாநில அரசுகள்.
  • நோக்கம்:
    •  நீர் இருப்பு மற்றும் நிலையான விவசாயத்தை உறுதி செய்ய மானாவாரி பகுதிகளை (பாசனம் இல்லாமல் மழைநீரையே நம்பி விவசாயம் செய்யப்படும் பகுதியாகும்) மேம்படுத்துவதில் கவனம் செலுத்துதல்.
    •  நீர்வடிப்பகுதி மேலாண்மை மற்றும் இயற்கை வள பாதுகாப்பு மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.
    •  நீர் மற்றும் மண் பாதுகாப்பில் நிலையான நடைமுறைகளை ஊக்குவித்தல்.