இது இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டமாகும்.

  • நோக்கம்:
    • இந்தியாவில் முறைசாரா துறையில் பணிபுரியும் மக்களுக்கு முதியோர் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தகுதி:
    • முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கானது.
    • இந்தத் திட்டத்தில் சேருவதற்கான வயது 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.
    • மாத வருமானம் ₹15,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  • முக்கிய அம்சங்கள்:
    • 60 வயதை எட்டிய பிறகு மாதம் ₹3,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
    • இது விருப்பமான மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும்.
    • இந்திய அரசு அதற்கான பங்களிப்பைச் செய்கிறது.
    • சந்தாதாரர் இறந்துவிட்டால், அவரது மனைவிக்கு அல்லது கணவருக்கு குடும்ப ஓய்வூதியமாக ₹1,500 (50%) வழங்கப்படும்.
  • நிர்வாகம்:
    • இந்தத் திட்டம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
    • இந்தத் திட்டம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ( Life Insurance Corporation of India LIC ) மற்றும் ( பொது சேவை மையம் CSC இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட்  ) common service centre CSC e-Governance Services India Limited  )ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
  • பதிவு:
    • பொது சேவை மையங்கள் ( Common Service Centres CSCs) வழியாக பதிவு செய்யலாம்.
    • ஆதார் மற்றும் ஜன்தன் வங்கி கணக்கு விவரங்கள் தேவைப்படும்.