
- மெசர்-மேட்டில் நிறுவனம் “இந்தியாவின் பட்டதாரி திறன் குறியீடு 2025” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு
- இந்த அறிக்கையின்படி, இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு திறன் குறைந்துள்ளது.
- 2025-ஆம் ஆண்டில், 42.6% பட்டதாரிகள் மட்டுமே வேலைக்குத் தகுதியானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
- இது 2023-இல் 44.3%-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- இதற்கான முக்கிய காரணம், வேலை வழங்குபவர்கள் எதிர்பார்க்கும் திறன்களுக்கும், பட்டதாரிகளிடம் உள்ள திறன்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரிப்பதே ஆகும்.
வேலைவாய்ப்பு வேறுபாடுகள்
- உயர்ந்த தரக் கல்லூரிகளில் (டயர்-I) பட்டம் பெற்றவர்கள் அதிக வேலைவாய்ப்பு விகிதத்தை (48.4%) கொண்டுள்ளனர்.
- அடுத்து டயர்-II (46.1%) மற்றும் டயர்-III (43.4%) கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள் உள்ளனர்.
- இந்திய மாநிலங்களில், டெல்லி, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகியவை அதிக வேலைவாய்ப்புத் தகுதியுள்ள பட்டதாரிகளை கொண்டுள்ளன.
